/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாய தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரண தொகை புதுச்சேரியில் புது திட்டம்
/
விவசாய தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரண தொகை புதுச்சேரியில் புது திட்டம்
விவசாய தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரண தொகை புதுச்சேரியில் புது திட்டம்
விவசாய தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரண தொகை புதுச்சேரியில் புது திட்டம்
ADDED : பிப் 24, 2026 04:24 AM
புதுச்சேரி: நாட்டிலேயே முதல்முறையாக விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2000 வழங்கும் திட்டம் புதுச்சேரியில் துவங்கப்படவுள்ளது.
மழைக்காலங்களில் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்காமல் வருவாயின்றி தவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டசபை தொடரில் விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு, மீன்பிடித்தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல் மழைக்காலங்களில் விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் துவங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி விரைவில் புதுச்சேரியில் வேளாண் துறை சார்பில் 6779 பேருக்கு ரூ.2000 வழங்கப்படவுள்ளது. அதையொட்டி முதல்வர் ரங்கசாமி மற்றும் வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் உடன் வேளாண் செயலாளர் யாசின் முகமது, கூடுதல் வேளாண் இயக்குனர் செழியன் பாபு, இணை வேளாண் இயக்குனர் சண்முகவேலு, தலைமை செயல் அதிகாரி முத்துகிருஷ்ணன் ஆகியோர் நேற்று திட்டத்தை விரைவாக கொண்டு வருவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

