sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

/

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு


ADDED : மார் 16, 2024 06:13 AM

Google News

ADDED : மார் 16, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மாநிலம் முழுவதும் உள்ள 26 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.84 கோடி கூடுதல் செலவாகும்.

மத்திய அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. அதன் அடிப்படையில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார் அனைத்து துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு, ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.இதன் மூலம் மாநிலம் முழுவதும் 26 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன் அடைய உள்ளனர். இதன் மூலம் அரசிற்கு மாதத்திற்கு ரூ.7 கோடியும், ஆண்டிற்கு 84 கோடியும் கூடுதலாக செலவாகும்.






      Dinamalar
      Follow us