/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓ.பி.சி.,தொழிலாளர்கள் ஜிப்மரில் ரத்ததானம்
/
ஓ.பி.சி.,தொழிலாளர்கள் ஜிப்மரில் ரத்ததானம்
ADDED : மார் 18, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஜிப்மர் ஓ.பி.சி., தொழிலாளர் நலச் சங்கத்தினர் ரத்ததானம் செய்தனர்.
சங்கத்தின் 9ம் ஆண்டு துவக்க விழா சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் வேலு தலைமை தாங்கி சிறப்புரை நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தார். செல்வமணி உட்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து, சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஜிப்மர் மருத்துவமனையில், ரத்ததானம் கொடுத்தனர்.