sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீஸ் மக்கள் மன்றத்தில் அதிகாரிகள் குறை கேட்பு

/

போலீஸ் மக்கள் மன்றத்தில் அதிகாரிகள் குறை கேட்பு

போலீஸ் மக்கள் மன்றத்தில் அதிகாரிகள் குறை கேட்பு

போலீஸ் மக்கள் மன்றத்தில் அதிகாரிகள் குறை கேட்பு


ADDED : ஜூலை 20, 2025 06:33 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மங்கலம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அதன்படி, மங்கலம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், எஸ்.பி., வம்சீதர ரெட்டி ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதேபோல், பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், காரைக்காலில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, எஸ்.பி., சுப்ரமணியன், தன்வந்திரி நகரில் எஸ்.பி., வீரவல்லவன், தவளக்குப்பத்தில் எஸ்.பி., பக்தவாசலம், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி.,க் கள் செல்வம், மோகன்குமார் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.

இதில், பொது மக்களிடம் இருந்து 78 புகார்கள் பெறப்பட்டு, 39 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மக்கள் மன்றத்தில் மொத்தமாக 52 பெண்கள் உட்பட 251 பேர் பங்கேற்று புகார்களை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us