ADDED : செப் 18, 2026 07:13 PM
புதுச்சேரி: ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லுாரியில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
லாஸ்பேட்டை மோதிலால் நேரு தொழில்நுட்ப கல்லுாரியில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பயனப்படுத்தக்கூடிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கையும் அங்கு நடக்கிறது. இதற்காக கல்லுாரியில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடக்கிறது.
இதனை, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோதுங்கன், தேர்தல் பொது பார்வையாளர் கொர்ரிலா சுவர்ண பாண்டாதாஸ், போலீஸ் பார்வையாளர் ஓம்பிரகாஷ் திரிபாதி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் சுதாகர், தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன்ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
