
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : திருக்கனுார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பூரணி, 81. இவர் தனது மகள் லட்சுமி பராமரிப்பில் இருந்து வந்தார்.
மகள் வீட்டின் முதல் மாடியில் தங்கியிருந்த பூரணி கடந்த 26ம் தேதி திடீரென மாயமானார். இதையடுத்து, அவரது மகள், மருமகன் ஆகியோர் பூரணியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திருக்கனுார் போலீசில் அளித்த புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0413-2688435 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.