நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கடற்கரைக்கு வந்த மூதாட்டி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் அடுத்த ஆவியந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 36. இவர் தனது குடும்பத்தினருடன் புதுச்சேரி கடற்கரைக்கு நேற்று முன்தினம் வந்தார். இவர்களுடன் வந்த உறவினரான எல்லையம்மாள், 70, என்பவரை கடற்கரை பகுதியில் உட்கார வைத்து விட்டு, சங்கர் அருகில் உள்ள கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது, அவரை காணவில்லை.
பல்வேறு இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

