sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

/

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்


ADDED : ஏப் 19, 2025 06:51 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அலுவலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை;

புதுச்சேரி மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து நாளுக்கு நாள் மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு விடுத்த கோரிக்கை அடிப்படையில் அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல புதுச்சேரியில் குடிநீர் பிரிவு சார்பில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முன்னுதாரணமாக முக்கிய இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முகாம் அமைக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனை, அஜந்தா சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பந்தல் அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. இதனை அரசு மேலும் நீட்டித்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாசில்தார் அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிலும் பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு சார்பில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us