sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரைஸ் மில் பூட்டை உடைத்து திருட்டு ஒருவர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்

/

ரைஸ் மில் பூட்டை உடைத்து திருட்டு ஒருவர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்

ரைஸ் மில் பூட்டை உடைத்து திருட்டு ஒருவர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்

ரைஸ் மில் பூட்டை உடைத்து திருட்டு ஒருவர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்


ADDED : ஜன 04, 2025 04:49 AM

Google News

ADDED : ஜன 04, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் அடுத்த குருவிநத்தம் பெரியார் நகர் புத்து கோவில் அருகே ரைஸ் மில், மற்றும் அதையொட்டி, தாம்பூல பை தயாரிக்கும் கடை உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் ரைஸ் மில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு, பக்கத்தில் உள்ள பை கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றனர்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததால், கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனிடையே ரோந்து பணியில் ஈடுபட்ட பாகூர் போலீசார், மர்ம நபர்கள் 3 பேரை மடக்கி பிடித்தனர்.

அப்போது, போலீசாரை தள்ளி விட்டு விட்டு இரண்டு பேர் தப்பி சென்றனர். ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார். விசாரணையில், அவர், கடலுார் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்த பிரேம்குமார், 26, என, தெரிய வந்தது.

இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, பிரேம்குமாரிடம், தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, பிரேம்குமாரிடம், ரெட்டிச்சாவடி போலீசார் தங்கள் எல்லையில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us