புதுச்சேரி கடைகளுக்கு பினாயில் சப்ளை செய்து வந்தவர், பைக் மோதி இறந்தார்.
லாஸ்பேட்டை, காமராஜ் நகரை சேர்ந்தவர் பாலமுருகன், 28; கோட்டக்குப்பத்தில் பினாயில் கெமிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அவரது தந்தை லட்சுமணசாமி, 58; பைக் மூலம் கடைகளுக்கு பினாயிலை சப்ளை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் பினாயிலை கடைகளுக்கு சப்ளை செய்ய தனது பைக்கில் காலாப்பட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் கடைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பல்கலைக்கழகம் 2வது கேட் அருகே வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த பைக், லட்சுமணசாமி பைக் மீது மோதியது.
படுகாயமடைந்த லட்சு மணசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்ட தாக தெரிவித்தார்.
இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

