ADDED : ஜூலை 01, 2026 02:41 AM
புதுச்சேரி: ஆன்லைன் சூதாட்டத்தில் வாலிபர் ரூ.300 இழந்தது குறித்து திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த விநாயகம்பட்டு, புதுநகரை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன், 28. இவர் கடந்த ஜனவரி 28-ம் தேதி ஆன்லைனில் பந்தயம் கட்டும் சூதாட்டத்தை விளையாடியுள்ளார். அப்போது,
திடீரென அனுமதியின்றி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 300யை மர்மநபர்கள் எடுத்துள்ளார்.இதனால், அதிர்ச்சியடைந்த அலெக்ஸ்பாண்டியன் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் இழந்த தொகை ரூ.300 மட்டும் என்பதால், அந்த வழக்கை திருக்கனுார் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.
தொடர்ந்து, திருக்கனுார் சப் -இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
