ADDED : டிச 30, 2025 04:22 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம் திறப்பு விழா நடந்தது.
நெட்டப்பாக்கம் தனியார் கம்பெனி மூலம் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.50 லட்சம் மதிப்பில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி துணை முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். பொறுப்பு ஆசிரியர் லதா வரவேற்றார். சம்பத், பாஸ்கர்,கார்த்திக், சீனிவாசன், வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் எழில்வேந்தன், சிவராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
