புற நோயாளி சிகிச்சை பிரிவு ஜிப்மரில் 12ம் தேதி இயங்காது
புற நோயாளி சிகிச்சை பிரிவு ஜிப்மரில் 12ம் தேதி இயங்காது
ADDED : மே 10, 2025 12:09 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, நாளை மறுநாள் 12ம் தேதி ஜிப்மர் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது.
ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு விடுமுறை தினமாக புத்த பூர்ணிமா முன்னிட்டு, நாளை மறுநாள் 12ம் தேதி, ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. அதனால், நோயாளிகள் அன்றை தினம் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும். அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
