/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெயிண்டர் துாக்குபோட்டு தற்கொலை
/
பெயிண்டர் துாக்குபோட்டு தற்கொலை
ADDED : டிச 31, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: திருமணம் ஆகாத வேத னையில் பெயிண்டர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டை நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா, துப்புரவு தொழிலாளி. இவரது மகன் குணசேகர், 36; பெயிண்டர்.
குடிப்பழக்கம் உடைய குணசேகரன், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற வேதனை யில் அடிக்கடி தற்கொலைக்கு முயன்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் குணசேகரன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ரா அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.