ADDED : நவ 06, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பணியின் போது தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
முதலியார்பேட்டை துலுகானத்தம்மன் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் 44, பெயிண்டர்.
இவர் கடந்த 1ம் தேதி புதுச்சேரி சோனாம்பாளையம் பகுதியில் வாட்டர் டேங்க் அலுவலகத்தில் உள்ள 2 வது மாடியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்தார்.
அவரை சக ஊழியர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ்குமார் நேற்று காலை இறந்தார்.
மனைவி காயத்திரி புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

