/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மயங்கி விழுந்து பெயிண்டர் சாவு
/
மயங்கி விழுந்து பெயிண்டர் சாவு
ADDED : ஏப் 15, 2026 05:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் மொபைல் சர்வீஸ் கடைக்கு சென்ற பெயிண்டர் மயங்கி விழுந்து இறந்தார்.
உழவர்கரை, வின்சென்ட் வீதியை சேர்ந்தவர் அகிலன், 42; பெயிண்டர். இவருக்கு, வாணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் உறவினர்களுடன், கந்தப்பா முதலியார் வீதியில் உள்ள மொபைல் சர்வீஸ் கடைக்கு சென்ற அகிலன், திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
தலையில் காயமடைந்த அகிலனை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அகிலன் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், ஓதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

