நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பெயிண்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தியால்பேட்டை லோகமுத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் 56, பெயிண்டர். இவருக்கு அந்தரங்க பகுதியில் கட்டி ஏற்ப்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் கடந்தமாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் இருந்து வந்தார்.
இதில் தொடர்ந்து வலி இருக்கவே, நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி ஜெய்தா கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.