நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெயிண்டர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துப்புராயபேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர், இவரது மகன், ரூகன், 21, இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
கடந்த 14ம் தேதி, வேலைக்கு சென்று விட்டு, வீட்டு, மாடியில் உள்ள அறைக்கு துாங்க சென்றார். மறுநாள் காலை அவரது தாய், காளி பார்க்கும் போது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.