/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
/
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
ADDED : மார் 19, 2026 04:41 AM

புதுச்சேரி: ஆர்ட்லேண்ட் அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு உணர்வுடமை என்ற தலைப்பில்,20 பெண் ஓவியக் கலைஞர்களின் ஓவியக் கண்காட்சி வளர்கலைக்கூடத்தில் நடந்தது.
கண்காட்சியை அரசு செயலர் முத்தம்மாள் துவக்கி வைத்து, பெண் ஓவியக் கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.
இதில், புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் லட்சுமி தத்தை, ஓவியர் சரவணகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கண்காட்சியில் பெண்மையும் இந்திய கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலைநயமிக்க ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நீர்வண்ணம், அக்ரிலிக், ஆயில் பெயிண்ட், கலர் பென்சில் போன்ற பல்வேறு ஊடகங்களில் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஏற்பாடுகளைஆதிரை, லட்சிய மதியழகி, அபர்ணா, பாலசுப்ரமணியன், சிவராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

