/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்
/
பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜன 29, 2026 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் இன்பநாதர் பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
கும்பாபிேஷக விழா, கடந்த 26ம் தேதி கணபதி வேள்வியுடன் துவங்கியது. தொடர்ந்து ேஹாம மற்றும் வாசனை திரவியம், பழவகை சமர்ப்பணம், திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடந்தது.
நேற்று முன்தினம் ( 27ம் தேதி) வேள்வி நிறைவு மற்றும் கணபதி தானம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக நேற்று (28ம் தேதி) காலை திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, தொடர்ந்துபரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
இன்பநாதர் பஞ்சமுக லிங்கேஸ்வரர் சுவாமிக்கு மகா அபிேஷகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

