ADDED : மார் 08, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் பானி பூரி வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு, சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நேற்று புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. கடற்கரையில் உள்ள நேரு சிலை அருகில் பானிபூரி கடை நடத்துபவர்கள், கடைகளை மூடிவிட்டு, அருகில் சிறுமி கொலையை கண்டித்து போராட்டம் நடத்திய சமூக அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நேரு சிலை அருகில் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி, சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர்.

