ADDED : செப் 03, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனையில், அப்பளம் கம்பெனி உரிமையாளர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேல்ராம்பட்டு மறைமலை நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், 45; வீட்டிலேயே அப்பளம் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிலில் நடஷ்டம் ஏற்பட்டது. அதனால், மனமுடைந்த அவர் வாழ பிடிக்கவில்லை என, தனது மனைவியிடம் புலம்பி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரது அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
