ADDED : மார் 14, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மத்திய துணை ராணுவபடை துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு நடத்தினர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல்துறை பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய சி.ஏ.பி.எப்., மத்திய படை பிரிவு போலீசார் நுாற்றுக்கும் மேற்பட்டோர் காரைக்காலுக்கு வருகைப்புரிந்தனர்.
தேர்தல் பாதுகாப்பாகவும், பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கவும்,. இன்ஸ்பெக்டர் புருேஷத்தமன் தலைமையில் துணை ராணுவபடையினர் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு நடத்தினர்.

