/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் சைபர் கிரைம் கும்பலிடம் கடந்தாண்டு ரூ.64 கோடி ஏமாந்த மக்கள்
/
புதுச்சேரியில் சைபர் கிரைம் கும்பலிடம் கடந்தாண்டு ரூ.64 கோடி ஏமாந்த மக்கள்
புதுச்சேரியில் சைபர் கிரைம் கும்பலிடம் கடந்தாண்டு ரூ.64 கோடி ஏமாந்த மக்கள்
புதுச்சேரியில் சைபர் கிரைம் கும்பலிடம் கடந்தாண்டு ரூ.64 கோடி ஏமாந்த மக்கள்
ADDED : ஜன 04, 2025 04:52 AM
புதுச்சேரி: கடந்த ஆண்டில் மட்டும், 64.2 கோடி ரூபாயை, சைபர் கிரைம் மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாத்தியுள்ளனர்.
புதுச்சேரியில், சைபர் கிரைம் போலீசார் இணைய வழி மூலம் நடக்கும், மோசடிகள் பற்றி பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி இருந்தும் தினத்தோறும் பொதுமக்கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து வருகின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது;
பொது மக்களை மும்பை சைபர் கிரைம் போலீசார் பெயரை கூறி, பார்சலில் போதைப் பொருள் வந்துள்ளது என, மிரட்டுவது. வங்கியில் இருந்து பேசுவதாகவும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு புதுப்பிக்க வேண்டும் எனவும், அதற்காக பாஸ்வேர்டு, ஓ.டி.பி., எண்ணை வாங்கி, பணம் பறிப்பது.
டெலிகிராம், இன்ஸ்டாகிராம் பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில், டாஸ்க்கை முடித்தால், அதிக பணம் தருகிறோம் எனக் கூறி ஏமாற்றுவது. போலி விளம்பரங்களை செய்து, பணம் பறிப்பது. பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என பல்வேறு வகையில் மோசடி கும்பல், பொதுமக்களிடம் பணத்தை ஏமாத்தி வருகின்றனர்.
ஓராண்டில்...
கடந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் மூலமாக மோசடி கும்பல், 64.2 கோடி ரூபாயை பொது மக்களை ஏமாற்றி அபகரித்துள்ளனர். இதில், பெண்களுக்கு எதிரான 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 12 வழக்குகளில், குற்றவாளிகளை கைது செய்து, 11 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரை 1930 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.