நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் சனிக்கிழமையை முன்னிட்டு நாளை (24ம் தேதி) காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
அதன்படி, தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் , டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கி, பொது மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார்.
ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையிலும், திருபுவனை, முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.பி.,க்கள் தலைமையிலும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
மேலும், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனிலும் எஸ்.பி., தலைமையில் மக்கள் மன்றம் நாளை நடக்கிறது.