ADDED : அக் 01, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நகரம் முழுவதும் குற்றங்களை தடுக்க போலீசார், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதலியார் பேட்டை போலீஸ் நிலைய சரக பகுதி மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் நடந்தது.இதில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணிகளை துரிதப்படுத்தவும், மரப்பாலம் முதல் முருங்கப்பாக்கம் வரை, சாலை ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்தவும், ரயில்வே மேம்பாலம் கீழே, போலீஸ் பூத் அமைக்கவும் கோரிக்கை வைத்தனர்.