sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

/

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மனு


ADDED : அக் 24, 2025 03:07 AM

Google News

ADDED : அக் 24, 2025 03:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதியில் கனமழையை எதிர்கொள்ள தொகுதியில் போர்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்., ஆணையரிடம் மனு வழங்கினார்.

புதுச்சேரியில் பெய்த கனமழையால் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட காக்காயந்தோப்பு அபிராமி நகர், வீராம்பட்டினம்சுனாமி குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தகவலறிந்த அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நிர்வாகிகளுடன் அந்த பகுதிகளை பார்வையிட்டார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்., ஆணையர் (பொ) நாகராஜன், பொறியாளர் சுரேஷ் ஆகியோரிடம் வரும் கனமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்கு வாய்க்கால் அனைத்தையும் துார்வார வேண்டும். மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். நீர் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய கோரி, மனு அளித்தார்.






      Dinamalar
      Follow us