sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இலவச மனைப்பட்டா வழங்க கோரி ஊசிமணி மாலையுடன் மனு

/

இலவச மனைப்பட்டா வழங்க கோரி ஊசிமணி மாலையுடன் மனு

இலவச மனைப்பட்டா வழங்க கோரி ஊசிமணி மாலையுடன் மனு

இலவச மனைப்பட்டா வழங்க கோரி ஊசிமணி மாலையுடன் மனு


ADDED : பிப் 18, 2025 06:23 AM

Google News

ADDED : பிப் 18, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுாரில் நரிக்குறவர்கள் இலவச மனை பட்டா வழங்க கோரி, கலெக்டருக்கு ஊசிமணி மாலை அணிவித்து மனு அளித்தனர்.

வில்லியனுார் மூர்த்தி நகர், கொம்பாக்கம் மற் றும் திருக்காஞ்சி பகுதி சாலையோரங்களில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக, தார்ப்பாய் கொட்டகை அமைத்து வசித்து வரும் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார இன மக்கள், இலவச மனைப்பட்டா வழங்க கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் தலைமையில், 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், நேற்று கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது, அவர்கள் எடுத்து வந்த ஊசிமணி, பாசிமணிகளை கலெக்டருக்கு மாலையாக அணிவித்து, இலவச மனைப்பட்டா வழங்க கோரிக்கை வைத்தனர்.

மனுவை பெற்ற கலெக்டர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us