sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வரதட்சனை கேட்டு இளம் பெண் சித்தரவதை கணவர், மாமியர் மீது போலீசார் வழக்கு

/

வரதட்சனை கேட்டு இளம் பெண் சித்தரவதை கணவர், மாமியர் மீது போலீசார் வழக்கு

வரதட்சனை கேட்டு இளம் பெண் சித்தரவதை கணவர், மாமியர் மீது போலீசார் வழக்கு

வரதட்சனை கேட்டு இளம் பெண் சித்தரவதை கணவர், மாமியர் மீது போலீசார் வழக்கு


ADDED : மார் 14, 2024 05:09 AM

Google News

ADDED : மார் 14, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : கூடுதலாக வரதட்சணை கேட்டு, இளம்பெண்ணை பட்டினி போட்டு சித்ரவதை செய்த கணவர், மாமியார் மீது மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடிவருகின்னறர்.

ரெட்டியார்பாளையம், புதுநகரைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மகன் மாதவன்,37; பைனான்சியர்.

இவர் கடந்த 2021ல் விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த இரும்பை கிராமத்தை சேர்ந்த ஞானவிழியை, 33, திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு மோஷிக், 2, மகன் உள்ளார்.

திருமணத்தின்போது 25 சவரன் தங்க நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்தனர். இந்நிலையில் மாதவனுக்கு வேறு பெண்ணுடன் தகாத உறவு இருந்ததை அறிந்த ஞானவிழி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் கடந்தாண்டு குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றார்.

இது குறித்து ஞானவிழி கடந்த சில நாட்களுக்கு முன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் இருதரப்பையும் அழைத்து பேசிய இனிமேல் பிரச்னையில் ஈடுபட மாட்டேன், மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக மாதவன் எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து சில தினங்களிலேயே மனைவியிடம் மீண்டும் பிரச்னை செய்து, வேறொரு பெண்ணுடன் வீடியோ கால் மூலமாக பேசி வெறுப்பேற்றி உள்ளார்.

மேலும் ஞானவிழிக்கு சாப்பாடு கொடுக்காமல் மாமியார் மற்றும் கணவர் சித்தரவதை செய்து துன்புறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஞானவிழி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜானகி, மாதவன், இவரது தாய் வீரம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us