/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்
/
பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 19, 2024 05:29 AM

திருக்கனுார்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் பார் உரிமையாளர்கள்- போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நேற்று இரவு நடந்த கூட்டத்திற்கு, காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.
அரசியல் கட்சியினரின் டோக்கன் நடைமுறைகளை பார்களில் அனுமதிக்க கூடாது.
இதனையும் மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் எச்சரித்தார்.
இக்கூட்டத்தில், காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஒயின்ஷாப் மற்றும் பார்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

