/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை
/
இறந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை
ADDED : செப் 05, 2025 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:இறந்த அடையாளம் தெரியாத நபர்கள் யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மாபுரி அருகில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் கடந்த 2ம் தேதி, இறந்து கிடந்தார். அவர் யார், எந்தஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதே போல், பாகூர் ஆராய்ச்சிக்குப்பம் சாராயக்கடை அருகில், அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து, பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.