/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை
/
வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை
ADDED : பிப் 18, 2026 04:27 AM
பாகூர்: வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் தர்மசீலன்; மீனவர், இவருக்கு நித்யா என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். கடந்த 15ம் தேதி இரவு அனைவரும் வீட்டில் துாங்கி உள்ளனர். மறுநாள் (16ம் தேதி) அதிகாலை 4:00 மணியளவில, தர்மசீலன் மீன்பிடி தொழிலுக்கு சென்று விட்டார்.
நித்யா கோவிலுக்கு சென்று காலை 6:30 மணியளவில், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, இரண்டாவது மகன் பிரித்திவிராஜ், 26, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

