sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண் உட்பட 3 பேர் மாயம் போலீசார் விசாரணை

/

பெண் உட்பட 3 பேர் மாயம் போலீசார் விசாரணை

பெண் உட்பட 3 பேர் மாயம் போலீசார் விசாரணை

பெண் உட்பட 3 பேர் மாயம் போலீசார் விசாரணை


ADDED : ஏப் 20, 2025 11:55 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: புதுச்சேரியில் பெண் உட்பட 3 பேர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியாங்குப்பம், வீராம்பட்டினம் சாலை, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் சேகர். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி லட்சுமி, 25. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்தது.

சேகர் கடந்த 11ம் தேதி வேலைக்கு சென்று விட்டு இரவு வந்து பார்க்கும் போது, வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை. சேகர் புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் கார்த்திக் மகன் முகேஷ்,25. கடந்த 16ம் தேதி வெளியே சென்ற இவர், வீடு திரும்பவில்லை. அவரது தந்தை புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த கரசூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சஞ்சய், 19. இவரை கடந்த 16ம் தேதி முதல் காணவில்லை. புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us