ADDED : நவ 06, 2024 08:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி இருதய ஆண்டவர் கோவில் அருகில் இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள இருதய ஆண்டவர் கோவில் அருகில் நேற்று மதியம் 70 வயது மதிக்க தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த ஒதியஞ்சாலை போலீசார் சடலத்தை மீட்டு ,அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.