/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு அலுவலகத்தில் ஏ.சி., மாயம் போலீசார் விசாரணை
/
அரசு அலுவலகத்தில் ஏ.சி., மாயம் போலீசார் விசாரணை
ADDED : ஆக 09, 2025 07:30 AM
புதுச்சேரி : தொழிலாளர் துறை அலுவலகத்தில் ஏ.சி., மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, கவுண்டன்பாளையம், வழுதாவூர் சாலையில் தொழிலாளர் துறை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள அறையில் ரூ.45 ஆயிரம் மதிப்பிலான 2 டன் ஏ.சி., பொருத்தப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அலுவலகத்தில் சீரமைப்பு பணிகள் நடத்தபோது, 2வது மாடியில் இருந்த 2 டன் ஏ.சி,, மாயமாகி இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைத்தனர்.
இதையடுத்து, அலுவலக ஊழியர்களிடம் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தொழிலாளர் துறையின் ஸ்டோர் கீப்பர் செந்தில்குமார் நேற்று முன்தினம் டி-நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அரசு அலுவலகத்தில் ஏ.சி., மாயமானது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

