ADDED : டிச 08, 2025 04:47 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பூச்சி மருந்து குடித்து கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார், கனுவாப்பேட், வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகள் ரூபிகா, 19; பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். பகுதி நேரமாக வில்லியனுாரில் தனியார் சூப்பர் மார்கெட்டில் வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு சென்று இரவு நேரம் கடந்து வந்தார்.
இதனை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனமுடைந்த ரூபிகா கடந்த 2ம் தேதி களை கொல்லி மருந்தை குடித்து, மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரூபிகா நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
