ADDED : மார் 02, 2026 03:43 AM
திருக்கனுார்: சுத்துக்கேணியில் தேர்வுக்கு படிக்காமல் மொபைல் பார்த்து கொண்டிருந்த மாணவியை தந்தை கண்டித்ததால் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காட்டேரிக்குப்பம் அடுத்த சுத்துக்கேணி, பாலர் பள்ளி வீதியை சேர்ந்தவர் பாபு, 43; பி.ஆர்.டி.சி., டிரைவர். இவரது மகள் மோனிகா, 15; அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 25ம் தேதி பாபு வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்த போது, மோனிகா பொதுத்தேர்வுக்கு படிக்காமல் மொபைல் பார்த்து கொண்டிருந்தார். அதனை பாபு கண்டித்தால் மனமுடைந்த மோனிகா, வீட்டின் இருந்த சளி, காய்ச்சல் மாத்திரைகளை அதிக அளவு சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து, அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மோனிகா இறந்தார். பாபு அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

