ADDED : டிச 24, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனை எதிரில் கடந்த 9ம் தேதி காலை 50 வயது மதிக்கத்தக்க நபர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார்.
இவரை லாஸ்பேட் தேவகி நகரைச் சேர்நத்த வேலு என்பவர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
இதுதொடர்பாக பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.