sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ.4.48 லட்சம் மோசடி தாய், மகனுக்கு போலீஸ் வலை

/

ரூ.4.48 லட்சம் மோசடி தாய், மகனுக்கு போலீஸ் வலை

ரூ.4.48 லட்சம் மோசடி தாய், மகனுக்கு போலீஸ் வலை

ரூ.4.48 லட்சம் மோசடி தாய், மகனுக்கு போலீஸ் வலை


ADDED : அக் 30, 2025 11:15 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, செந்தாமரை நகர், குரு சித்தானந்த தெருவை சேர்ந்தவர் டேவிட் பென்னி, 37; பட்டதாரியான இவரை, கடந்த மே மாதம், நாவற்குளம், வசந்தப்புரத்தை சேர்ந்த அந்தோணி செந்தில்குமார், அவரது தாய் முனியம்மாள் ஆகியோர் அணுகி உள்ளனர்.

அப்போது, புதுச்சேரி, லெனின் வீதியில் கடையை வாடகைக்கு எடுத்து சிங்கம் ஸ்வீட்ஸ் என்ற பெயரில் பேக்கரி கடை நடத்தி வருவதாகவும், அதில் ரூ. 4 லட்சம் கொடுத்து பங்குதாரராக இணைந்தால், அதில் வரும் லாபத்தை சரியாக பிரித்து கொள்ளலாம் என, கூறியுள்ளனர். இதை நம்பிய டேவிட் பென்னி, அந்தோணி செந்தில்குமாரிடம் பல்வேறு தவணைகளாக ரூ. 4 லட்சத்து 48 ஆயிரத்து 617 கொடுத்தார்.

ஆனால், இதுவரையில் டேவிட் பென்னியை பேக்கரியில் பங்குதாரராக இணைத்ததற்கான ஒப்பந்தம் எதுவும் வழங்கவில்லை. மேலும், பேக்கரியில் வரும் லாபப்பணத்தை பிரித்து கொடுக்கவில்லை. இதுகுறித்து டேவிட் பென்னி கேட்டபோது, அவரை செந்தில்குமார் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து டேவிட் பென்னி அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் அந்தோணி செந்தில்குமார், அவரது தாய் முனியம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us