sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபர் மீது தாக்குதல் 2 பேருக்கு போலீஸ் வலை

/

வாலிபர் மீது தாக்குதல் 2 பேருக்கு போலீஸ் வலை

வாலிபர் மீது தாக்குதல் 2 பேருக்கு போலீஸ் வலை

வாலிபர் மீது தாக்குதல் 2 பேருக்கு போலீஸ் வலை


ADDED : ஜன 18, 2024 03:58 AM

Google News

ADDED : ஜன 18, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூரில் வாலிபரை தாக்கி, கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து இருவரை தேடி வருகின்றனர்.

பாகூர் திருமால் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் 26; கொரியர் சர்வீஸ் சூப்பர்வைசர். கடந்த 14ம் தேதி இரவு 10:00 மணியளவில், அஜித்குமார், தனது நண்பரான விஜி (எ) காளிதாஸ்சுடன், அங்குள்ள வண்ணாங்குளம் வீதியில் சிறிய வாய்க்கால் பாலத்தில் மீது அமர்ந்து கொண்டு மது அருந்தினர்.

அவ்வழியாக பைக்கில் வேகமாக சென்ற நபரை பார்த்து அஜித்குமார் கத்தி கூப்பிட்டார். அந்த நபர் பைக்கை நிறுத்திய போது, பாகூரை சேர்ந்த தாமரை என்பது தெரிந்துள்ளது.

அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தாமரை, அஜித்குமாரை ஆபாசமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். தப்பியோடிய அஜித்குமார் அங்குள்ள வீட்டின் மாடியில் பதுங்கினார். மீண்டும் தாமரை தனது தனது நண்பர் ராஜிவுடன் அங்கு வந்தார். தாமரையை கண்டதும், மாடியில் இருந்து குதித்து அஜித்குமார் தப்பியோட முயன்றார்.

அதில், அவருக்கு முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால், கடலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு தாமரை, ராஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us