ADDED : அக் 26, 2025 03:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இ.சி.ஆரில், எஸ்.பி., ரகுநாயகம் தலைமையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
லாஸ்பேட்டை, புறக்காவல் நிலையம் அருகில் ரவுடியை விரட்டி சென்று கத்தியால் வெட்டிய சம்பவம் புதுச்சேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து, வடக்கு பகுதி எஸ்.பி., ர குநாயகம் தலைமையில், டி.நகர்., இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை 5:00 மணியளவில், டி.நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை வழியாக இ.சி.ஆர்., லதா ஸ்டீல் ஹவுஸ் வரை ரோந்து சென்றனர். அதனால், அப்பகுதியில் பரப ரப்பு ஏற்ப ட்டது.

