/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டி கொலை 8 பேரிடம் போலீசார் விசாரணை
/
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டி கொலை 8 பேரிடம் போலீசார் விசாரணை
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டி கொலை 8 பேரிடம் போலீசார் விசாரணை
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டி கொலை 8 பேரிடம் போலீசார் விசாரணை
ADDED : ஏப் 28, 2025 05:49 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ௮ பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உமாசங்கர், 38; இவர், காமராஜர் நகர் தொகுதி பா.ஜ., பொறுப்பாளராக இருந்து வந்தார். தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்த நாள் விழா கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள பாரீஸ் திருமண நிலையத்தில் நேற்று (27ம் தேதி), கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழா ஏற்பாடுகளை உமாசங்கர் கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கருவடிக்குப்பம் பாரீஸ் திருமண மண்டபத்தில் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை பார்த்துவிட்டு, இரவு 11:45 மணியளவில் உமாசங்கர் வெளியே வந்தார். அப்போது, அங்கு 5 பைக்குகளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், உமாசங்கரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதில், உமாசங்கர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை காரணமாக கருவடிக்குப்பம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட உமாசங்கர், புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு உபகரணங்களை கொண்டு விளையாட்டு முகாம் அமைக்கும் தொழில் செய்து வந்தார். இதே தொழிலை செய்து வரும் மற்றொரு கும்பலுடன் தொழில் போட்டி இருந்து வருகிறது. இதன் காரணமாக கொலை செய்யப்பட்டரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட உமாசங்கரின் தந்தை காசிலிங்கம் லாஸ்பேட்டை போலீசில் கொடுத்துள்ள புகாரில், 'எனது மகன் கொலை பின்னணியில் புதுச்சேரி அமைச்சர் ஒருவர் உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'என தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த புகாரை அமைச்சர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னையும், எனது குடும்பத்தையும் பழிவாங்கும் நோக்கில் பொய் செய்தியை பரப்பி வருகின்றனர்.
இது கண்டிக்கத்தக்கது. இதை பரப்புவோர் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.
உமாசங்கர், தொழில் போட்டி அல்லது அரசியல் காரணமாக கொலை செய்யப்பட்டரா, வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை தொடர்பாக, சந்தேகத்தின் பேரில், 8 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

