sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆப்பிரிகன் பறவையை கடிக்க வைத்து மனைவியை துன்புறுத்திய கணவர் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு

/

ஆப்பிரிகன் பறவையை கடிக்க வைத்து மனைவியை துன்புறுத்திய கணவர் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு

ஆப்பிரிகன் பறவையை கடிக்க வைத்து மனைவியை துன்புறுத்திய கணவர் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு

ஆப்பிரிகன் பறவையை கடிக்க வைத்து மனைவியை துன்புறுத்திய கணவர் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு


ADDED : ஜன 27, 2025 05:08 AM

Google News

ADDED : ஜன 27, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : ஆப்ரிக்கன் பறவையை கடிக்க வைத்து மனைவியை துன்புறுத்திய கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வில்லியனுார், சுல்தான்பேட்டை சேர்ந்த பெரோஸ் முகமது மகள் ஆப்ரின் ஷகிரா, 25. இவர், சென்னை, தனியார் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தபோது, கடந்த 2021ம் ஆண்டு சென்னை அண்ணா நகரை சேர்ந்த முகமது ஷரீப் மகன் முகமது இக்ராம் என்பவருடன் திருமணம் நடந்தது.

திருமணம் ரூ.25 லட்சம் செலவில் புதுச்சேரி ஹோட்டலில் நடந்தபோது, 150 சவரன் நகைகள், ரூ. 4 லட்சம் தங்க வாட்ச், ரூ.1.30 லட்சம் மொபைல் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆப்ரின் ஷகிரா வில்லியனுார் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், திருமண முடிந்த சில வாரத்திலேயே சீர்வரிசையாக அணிந்து வந்த நகைகளை, மாமியார் பெற்று கொண்டார். தொடர்ந்து, கணவர் முகமது இக்ராமின், சில மாதங்கள் கழித்து கூடுதலாக 50 சவரன் நகை மற்றும் பெற்றோரிடம் இருந்து சொத்தை எழுதி வாங்கி வரும்படி, தனது வீட்டில் வளர்த்து வரும் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் காங்கோ சாம்பல் பறவையை கடிக்க வைத்து துன்புறுத்தினார்.

மேலும், கணவர் சில பெண்களுடன் ஆபாசமாக பேசி வருவது தெரிய வந்ததால், அதுகுறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், முகமது இக்ராம், அவரது தந்தை முகமது ஷரீப், தாய் நசீமா ஷரீப், தம்பி லுக்மான் ஷரீப் மற்றும் மீன் ஹாஜ் பேகம் ஆகியோர் மீது வில்லியனுார் மகளிர் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us