sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

/

ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்


ADDED : நவ 01, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, மாநிலத்தில் கடந்த 28ம் தேதி முதல் வரும் பிப்ரவரி 7ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த ப ணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மீன் வளத்துறை அலுவலகத்தில், ஏம்பலம் மற்றும் பாகூர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, வாக்காளர் பதிவு அதிகாரி முகமது இஸ்மாயில் முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டு ஓட்டுச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனை மற்றும் கருத்துகளை கேட்டறிந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொண்டார்.

இதேபோல், குருமாம்பேட்டில் கால்நடை மருத்துவ கல்லுாரியில், மண்ணாடிப்பட்டு மற்றும் திருபுவனை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களிடம் தகவல் சேகரிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. வாக்காளர் பதிவு அதிகாரி குமரன் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us