/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில்., பொங்கல் விழா
/
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில்., பொங்கல் விழா
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில்., பொங்கல் விழா
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில்., பொங்கல் விழா
ADDED : ஜன 10, 2026 05:24 AM

புதுச்சேரி: திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பல்கலைக் கழக பதிவாளர் தனசேகரன் தேவராஜ் வரவேற்றார். பல்கலைக் கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், நிர்மல் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்கலைக் கழக துணை வேந்தர் ரஞ்சன் வாழ்த்துரை வழங்கினார். சினிமா நடிகர்கள் நரேந்திர பிரசாத், பூஜிதா தேவராஜூ ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். விழாவில் பல்கலைக் கழக மாணவர்களின் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் பாரம்பரிய முறையில் நடந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு பல்லாங்குழி, தாயம், கிட்டிப்புல், பரமபதம், பம்பரம், பல்லாங்குழி, சாக்கு போட்டி, கபடி, கயிறு இழுத்தல், வழுக்கு மரம், உறியடி உள்ளிட்ட தமிழ் பாரம்பரிய பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பரிசுகள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை புல முதன்மையர்கள், பேராசியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
ஒருங்கிணைப்பாளர் சேகர் நன்றி கூறினார்.

