/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் சார்பில் பொங்கல் விழா: மாட்டு வண்டி ஓட்டி டி.ஐ.ஜி., அசத்தல்
/
போலீஸ் சார்பில் பொங்கல் விழா: மாட்டு வண்டி ஓட்டி டி.ஐ.ஜி., அசத்தல்
போலீஸ் சார்பில் பொங்கல் விழா: மாட்டு வண்டி ஓட்டி டி.ஐ.ஜி., அசத்தல்
போலீஸ் சார்பில் பொங்கல் விழா: மாட்டு வண்டி ஓட்டி டி.ஐ.ஜி., அசத்தல்
ADDED : ஜன 15, 2026 07:57 AM

புதுச்சேரி: ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், போலீசாருடன் மாட்டு வண்டியை ஓட்டி மகிழ்ந்தார்.
போலீஸ் துறை சார்பில், நேற்று கோரிமேடு ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., இஷா சிங், எஸ்.பி., ரட்சனாசிங், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து, நடந்த கோலப்போட்டியில், பெண்கள் மற்றும் ஆண்களும் பங்கேற்றனர். அதில் சிறந்த கோலமிட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, உறியடி போட்டி நடந்தது.
பொங்கல் விழாவில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், உறி அடித்தும், மாட்டு வண்டி ஓட்டி அசத்தினார். விழாவில், சீனியர் எஸ்.பி, இஷாசிங், எஸ்.பி., ரட்சனா சிங் ஆகியோர் தமிழர் பாரம்பரியப்படி சேலை கட்டிக் கொண்டு, மாட்டு வண்டியில் டி.ஐ.ஜி.,யுடன் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

