sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஏழை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

/

ஏழை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

ஏழை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

ஏழை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா


ADDED : மே 21, 2025 11:14 PM

Google News

ADDED : மே 21, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் அருகே பெரம்பை கிராமத்தில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

வில்லியனுார் அடுத்த தமிழக பகுதியான வானுார் வட்டம், பெரம்பை ஏழை மாரியம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு தேர் திருவிழா நேற்று நடந்தது. தேர் திருவிழா கடந்த 19ம் தேதி காலை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மாலையில் ஐயனாரப்பனுக்கு ஊரணி பொங்கல் மற்றும் இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது.

20ம் தேதி அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு மேல் செடல் உற்சவம், இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று ஏழைமாரியம்மன் தேர் திருவிழா நடந்தது.

காலை 9:00 மணியளவில், ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். பெரம்பை கிராம முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் பகல் 2:00 மணியளவில் நிலையை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை பெரம்பை கிராம மக்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us