/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விசைத்தறி நுால் சுற்றும் இயந்திரம் இயக்கி வைப்பு
/
விசைத்தறி நுால் சுற்றும் இயந்திரம் இயக்கி வைப்பு
விசைத்தறி நுால் சுற்றும் இயந்திரம் இயக்கி வைப்பு
விசைத்தறி நுால் சுற்றும் இயந்திரம் இயக்கி வைப்பு
ADDED : பிப் 09, 2026 04:54 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை, நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விசைத்தறி மற்றும் நுால் சுற்றும் இயந்திரத்தை முதல்வர் ரங்கசாமி இயக்கி வைத்தார்.
லாஸ்பேட்டை, நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ராஜ்ய சபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.29.35 லட்சம் மதிப்பில் புதிதாக 6 விசைத்தறி மற்றும் நுால் சுற்றும் இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டது.
அதனை முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்து, கைத்தறி துணி ரகங்களுக்கு தேவையான பருத்தி நுால் தடையின்றி வழங்க, நுால் வங்கி அமைப்பதற்கு அரசு மூலம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விழாவிற்கு, செல்வகணபதி எம்.பி., முன்னிலை வகித்தார். தொகுதி எம்.எல்.ஏ., வைத்தியநாதன், வளர்ச்சி ஆணையர் கிருஷ்ண மோகன் உப்பு, அரசு செயலர் விக்ராந்த் ராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாணிக்கதீபன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இளங்கோவன், இணை பதிவாளர் சாராங்கபாணி, பாண்டெக்ஸ் நிறுவன மேலாண் இயக்குனர் மற்றும் அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

