ADDED : ஆக 25, 2025 02:47 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம் : சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 10.30 மணிக்கு கோதண்டராமனுக்கு திவ்ய பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து திருமஞ்சனமும், தீபாரதனை நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், விசேஷ தீபாரதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
