UPDATED : ஜூலை 29, 2026 05:35 PM
ADDED : ஜூலை 29, 2026 05:31 PM
புதுச்சேரி: அக்னிவீர் திட்டத்தில், ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்திய ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ், ஆட்சேர்ப்பு முகாம் புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், வரும் 1ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. இதில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலுார், திருவள்ளுர், ராணிபேட்டை, விழுப்புரம், திருப்பத்துார், கடலுார், சென்னை, கள்ளகுறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆட்சேர்ப்பு நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், மைதானத்தில், அதற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில், விண்ணப்பதாரர்களில், உயரம், எடை அளக்கும் இடம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் இடங்கள் தயார் படுத்தப்பட்டன. ஓட்டம் நடைபெறும் சின்தடிக் டிராக்கை சுத்தப்படுத்தி, தயார்படுத்தினர்.
